Friday, December 24, 2010

ப்ரியா,……வெட்கப்பட்டாள்

“இப்ப அவ காலேஜ் பஸ்ல வந்துகிட்டிருக்காளாம். நம்ம ஸ்டாப்புல அவ இறங்குனதும் நீயா போய் அவகிட்ட பேசுறயா இல்ல, அவளே வந்து பேசணுமான்னு ப்ரியா கேக்குறா”.
பேசுறதெல்லாம் பேச்சாகாதுங்க‌.
அடுத்தவன் கதைய கேட்டு சும்மா பொறாமபடாதீங்க‌.
பேச்சவச்சித்தான் ஒவ்வொருத்தருடைய‌ வாழ்க்கையே நகருது.
அதுனாலதான் எல்லா டீலிங்கும் எல்லாராலயும் பண்ணமுடியறதில்ல‌.
இப்ப என் கதைய கேளுங்க….
அது, ஒரு அழகிய UG காலம்.
ப்ரியா, எங்க காலனி பொண்ணு.
ப்ரியா = ஈகோ : சேட்ட.
(அதென்னமோ, ப்ரியான்னு பேரு இருக்குற பொண்ணுங்க எல்லாம் சேட்டகாரிங்களாத்தான் இருக்காங்க, எனக்கு தெரிஞ்ச வரைக்கும்.)
காலனியில நிறைய பசங்க கார்ட், ரோஸோட அவ பின்னாடி சுத்துனாங்க. எங்க குருப்புல என்னத்தவுற எல்லாரும் அவகிட்ட பிலிம் விட பாத்து, தோத்தவனுங்க. ஆனா, அவ விட்ட நக்கல்ல எல்லா பயல்களும் தலைவி(தி)யேன்னு சரண்டர் ஆயிட்டாங்க‌‌.

நாங்க இருந்த தெருவில தான், அவ வீடு. அதுவுமில்லாம, எங்க குருப்பு பசங்க ரெண்டு பேரு, காலேஜ்ல அவ லேப் பார்ட்னர்ஸ். இவனுங்க நல்ல பேரு வாங்குறதுக்காக போட்டி போட்டு அந்த தெய்வத்துக்கு சமமா உண்ம பேசுனதுல; எங்க கொள்ளுத்தாத்தாங்க கம்மங்காட்டுக்கு போனதுல இருந்து இன்னைக்கு எவனுக்கு கான்ஸ்டிபேஸன் பிரச்சன இருந்தது வர, அவ எங்களபத்தி up to date ஆ இருப்பா.
காலனி பேக்கரில எங்க குருப்பு இருக்குறத பாத்து அவ வந்தான்னா,
நா அந்த இடத்தவிட்டு எப்படியும் எஸ்ஸாயிருவேன்.
நா அவகிட்ட பேசாததுக்கு ஒரு காரணம் இருந்திச்சு.
ஏதோ ஒரு ரிட்டையர்ட் பாட்டிக்கு ஒரு நாள் நா ஹெல்ப் பண்ண, அத பாத்து காலனியே என்ன யோக்கியன்னு என் பெர்மிஸன் இல்லாம, அவுட்ரைட்டா declare பண்ணிருச்சு. காலனியே, “யோக்கியன் கம் ஹியர், யோக்கியன் சாப்டாச்சா”னு என்கிட்ட பேசாததுதான் கொறச்சல்.
ஒரு நாள், என் காதுல படணும்னே மொக்க பிகர் ஒருத்தி, ப்ரியாட்ட, “இது சரியான அம்மாஞ்சிடி”ன்னு கமெண்ட் வேற அடிச்சி சிரிச்சா…….
இந்த காலகட்டத்துல, உண்மவிளம்பிங்கள்ள ஒருத்தன் என் கவித/கத நோட்ட‌ ஒரு நாளு எடுத்துகிட்டு போய், ப்ரியாகிட்ட கொடுத்திட்டான். எங்க நாம மாட்டுணோம்னா “இதெல்லாம் கவிதயா/கதையா. கவிதையில என்னா feelingsuuuuu”ன்னு பப்ளிக்ல ரேக்கு ரேக்குனு ரேக்கிடுவாளோன்ற பயம் தான், எனக்கு.
இப்படி நா பம்மிக்கிட்டு எஸ்கேப்பாகிட்டிருக்க, ஆனா, அவ என்னடான்னா,”இவ்ளோ நல்லா எழுதுறான்”, (அது என் கவித/கதய சொன்னாளா இல்ல ‌கையெழுத்த சொன்னாளோ), “எவ்வளவு அமைதியானவனா இருக்கான். Nice person” நு எதையோ சொல்ல, குருப்பு முழுசும் over night ல‌ சூனியம் வச்ச ஷாஜகான் “விஜய்” மாதிரி ஆகிட்டானுங்க.
அதோட ரிஸல்ட் தான் ஓப்பனிங்ல வந்த வார்னிங்/ஆர்ட்ர்.
எப்படியும் இந்த பேக்கரி வாசல்ல நம்ம மானத்த அவ வாங்க போறான்றது, confirmed. சேட்டக்காரி; அவளா வந்து பேசுனா, damage ஜாஸ்தியா இருக்கும். Risk எடுத்து நாமளே பேசிருவோம்னு முடிவு பண்ணேன்.
ஆனா, என்னத்த பேசுறது?
அதான் தெரியல.
உண்மவிளம்பிங்கள தெரியாம கேக்கப்போய், “ஒரு பேப்பர்ல குத்திட்டானுங்களேனு காலைலயிருந்து கடுப்புல இருக்கோம்….”னு அவனுங்க பைக் வீல எத்துனானுங்க. அவனுங்களுக்கு exam result பிரச்சன.
என்ன பேசுறதுன்னு வேற யோசிக்குறதுக்குள்ள,
அந்த பாழாப்போன காலேஜ் பஸ் வேற‌ வந்துரிச்சு.
முத ஆளா அவ இறங்கி, நேரா என்ன பாத்து வர ஆரம்பிச்சிட்டா…..
“பேசுடா, பேசுடா”னு கூட இருந்தவனுங்க உசுப்பேத்துற விட அரண்டு கிடக்குற உள்மனசு படபடக்க; அவள பாத்து, “ப்ரியா….”னு கொஞ்சம் சத்தமாவே கத்திட்டேன்.
அந்த கணம் அவ முகத்துல ஆயிரம் பரவசம், பூரிப்பு, பெரும, சந்தோசம், வெட்கம் (என்ன!!!!!! இவளுக்கு வெக்கப்படத்தெரியுமா????) தெரிஞ்சது. ஆனா, சத்தம் கொஞ்சம் ஜாஸ்தியா போனதுல, whole college bus, bakery, bus stopநு எல்லாரும் எங்களயே பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.
“அடப்பாவி, யோக்கியன் மாதிரி இருந்தவனா இவன்னு”, எங்க காலனி ஆளுங்க மொறைக்குறதப்பாத்து இன்னும் நா டென்ஷனாக‌,
“ஐயய்யோ, கூப்டுட்டோம், ஆனா அடுத்து என்ன பேசணும்ன்னு யோசிக்கலையே. சொதப்பிடாதடான்னு” உள்மனசு extraவா இன்னும் மிரட்ட,
இந்த குழப்பத்துல volumeம reduce பண்ணாம அப்படியே துணிஞ்சி
பேசிட்டேன், கத்திட்டேன்…….
“ப்ரியா, ரிசல்ட் வந்திருச்சில்ல, எத்தன அரியரு……..”
//பேச்சவச்சித்தான் ஒவ்வொருத்தருடைய‌ வாழ்க்கையே நகருது.
அதுனாலதான் எல்லா டீலிங்கும் எல்லாராலயும் பண்ணமுடியறதில்ல‌.//
(Picture courtesy: inspeech.net/Scholarship/default.aspx)

4 comments:

Unknown said...

/////“ப்ரியா, ரிசல்ட் வந்திருச்சில்ல, எத்தன அரியரு……..”
//பேச்சவச்சித்தான் ஒவ்வொருத்தருடைய‌ வாழ்க்கையே நகருது.
அதுனாலதான் எல்லா டீலிங்கும் எல்லாராலயும் பண்ணமுடியறதில்ல‌.//
/////
இத எதுக்கு சொல்றீங்கன்னு நினச்சேன் முதல்ல! சூப்பர்! :-)

G.M Balasubramaniam said...

ப்ரியா, ரிசல்ட் வந்திருச்சில்ல. எத்தன அரியரு

நுணலும் தன் வாயால் கெடும் என்று சும்மாவா சொன்னாங்க.Better luck next time.

ஆமினா said...

ஹா.....

சூப்பர்!!!

இது உண்மையா கற்பனையா???

சிவகுமாரன் said...

\\\“ப்ரியா, ரிசல்ட் வந்திருச்சில்ல, எத்தன அரியரு…….///
--“படிக்கிறப்ப என்னை அறியாம சத்தம் போட்டு சிரிச்சிட்டேங்க.

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...